கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும்.. ஸ்டாலினுக்கு போன் செய்து குடியரசுத்தலைவர் விசாரித்தார்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஸ்டாலினிடம் விசாரித்து இருக்கிறார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஸ்டாலினிடம் விசாரித்து இருக்கிறார்.
திமுக தலைவர் கருணாநிதி காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் இப்போது வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரை வரிசையாக தலைவர்கள் சென்று சந்தித்து வருகிறார்கள். கருணாநிதியின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி ஸ்டாலினிடம் விசாரித்து இருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது கருணாநிதியின் உடல்நிலை குறித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஸ்டாலினிடம் விசாரித்து இருக்கிறார். இதுகுறித்து ராம்நாத் கோவிந்த் டிவிட் செய்துள்ளார்.
Spoke to Thiru Karunanidhi’s family members on the phone and inquired about his health. Wishing the former Chief Minister of Tamil Nadu, a veteran of our public life, a quick recovery #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) July 27, 2018
அதில், கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்திடம் போன் செய்து விசாரித்தேன். முன்னாள் முதல்வரும், சிறந்த அரசியல் தலைவருமான அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன், என்றுள்ளார்.