ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தில் ஜனாதிபதி கையொப்பம் கட்டாயம் தேவை: வீரமணி தமிழக அரசுக்கு அட்வைஸ்
ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தில் ஜனாதிபதி ஒப்புதலை பெற தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று வீரமணி தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தில் இறுதியாக அது சட்ட அதிகாரம் பெற, குடியரசுத் தலைவரின் கையொப்பமும் கட்டாயம் தேவை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
''தற்போது ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு கொண்டு வரவிருக்கும் அவசர சட்டத்திற்கு, மத்திய அரசின் மூன்று துறைகளின் ஒப்புதல் பெற்றால் மட்டும் போதாது; இறுதியாக அது சட்ட அதிகாரம் பெற, குடியரசுத் தலைவரின் கையொப்பமும் கட்டாயம் தேவை.

இல்லாவிட்டால் இதை வைத்து, பிறகு சட்டச் சிக்கல் ஏற்படலாம்; எனவே, தமிழக அரசு உடனடியாக குடியரசுத் தலைவர் கையொப்பம் - ஒப்புதலைப் பெறுவதும் அவசரம் - அவசியம் என்று சில சட்ட நிபுணர்களின் கருத்தும் உள்ளதால், தமிழக அரசு அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் கைக்கெட்டியும் வாய்க்கெட்டாமல் போகக்கூடும்'' என்று கி.வீரமணி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications