பேரிடர் காலங்களில் விமானப்படையின் சேவை அளப்பறியது… ஜனாதிபதி பெருமிதம்
தாம்பரம் விமானப்படை தளத்தில் நடைபெற்ற விமானப் படை வீரர்களுக்கு விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டார்.
சென்னை: சென்னை தாம்பரம் விமானப் படை தளத்தில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்றார். அங்கு சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கு விருது வழங்கி சிறப்பு செய்தார் ஜனாதிபதி.
தாம்பரத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள நேற்று சென்னை வந்தார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்த ஜனாதிபதி, இன்று காலை 8.30 மணியளவில் தாம்பரம் விமானப்படை தளத்திற்கு பிராணாப் முகர்ஜி புறப்பட்டுச் சென்றார். 9 மணிக்கு அங்கு சென்று சேர்ந்த ஜனாதிபதிக்கு சிறப்பு வரவேற்று அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய விமானப்படை வீரர்களை கவுரவித்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
அளப்பறிய சேவை
தேசத்தின் வளர்ச்சி, பாதுகாப்பு, முன்னேற்றத்தில் விமானப்படை வீரர்களின் பங்கு அளப்பறியது. பேரிடர் காலங்களில் விமானப்படை வீரர்களின் பணி சிறப்பாகவே இருந்து வருகிறது. அதிநவீன தொழில்நுட்பத்தில் இந்திய விமானப்படை சிறந்து விளங்குகிறது. இந்தியா மிக வலிமையான நாடாக உருவாகி வருகிறது.
பதான்கோட் பதிலடி
பதான்கோட் விமானப்படை தாக்குதலின் போது விரைவாக பணியாற்றி நாட்டை பாதுகாத்தவர்கள் விமானப்படை வீரர்கள். பதான்கோட் தாக்குதல் சம்பவத்துக்கு தக்க பதிலடி கொடுத்தது இந்திய விமானப்படை. வீரர்களுக்கு இயந்திரவியல் பயிற்சி மிக முக்கிய பங்காற்றுகிறது. இந்திய விமானப்படையின் வளர்ச்சிக்கு தொழில்நுட்ப பயிற்சி மிக முக்கிய பங்களிக்கிறது. பயிற்சி பெற்ற வீரர்களின் நாட்டின் வளர்ச்சிக்கு சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். தீவிரவாத ஊடுருவலை தடுக்க முப்படைகளும் முழு கவனம் செலுத்தி வருகின்றன என்று கூறினார்.
வீரர்களின் சாகசம்
தாம்பரத்தில் விமானப்படை வீரர்கள் விமானத்தில் வானில் பறந்த படியே பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை செய்து காட்டினார்கள். இந்த நிகழ்ச்சிகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கண்டு ரசித்தார்.
தனி கொடி
தாம்பரம் விமானப்படை தள தொழில்நுட்ப பிரிவுக்கு தனி கொடியை பிரணாப் முகர்ஜி வழங்கி கவுரப்படுத்தினார். முன்னதாக, வீரர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications