For Quick Alerts
For Daily Alerts
Just In
காக்கா தண்ணி குடிச்ச கதை தெரியும்... இது பாப்பா தண்ணி குடிச்ச கதை!
20 லிட்டர் கேனில் ஒரு குழந்தை புத்திசாலித்தனமாக தண்ணீர் குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சென்னை: பானைக்குள் இருந்த தண்ணீரை தனது புத்தி சாதுரியத்தினால் காகம் ஒன்று தண்ணீர் குடித்த கதையை கேட்டிருப்போம். ஆனால் குழந்தை ஒன்று 20 லிட்டர் கேனில் உள்ள தண்ணீரை மிகவும் சாதுர்யமாக குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மிகவும் தாகத்தில் இருந்த காகம் ஒன்று தண்ணீருக்காக அலைந்தது. அப்போது ஒரு பானைக்குள் இருந்த கொஞ்சம் அளவு தண்ணீரை கண்டதும் காக்காவுக்கு குஷி ஏற்பட்டது. பின்னர் குடிக்க முயன்றபோதுதான் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
இதனால் சிறிய கூழாங்கற்களை பானைக்கு போட்டு அதில் உள்ள தண்ணீரின் அளவு மேலே ஏறியதும் தாகத்தை தீர்த்து கொண்டது.
ஆனால் ஒரு குழந்தை 20 லிட்டர் கேனில் உள்ள தண்ணீரை தாயிடம் பால் குடிக்கும் பாணியில் புத்திசாலித்தனமாக குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வீடியோ:
Comments
English summary
Everyone know crow and the pot story in our childhood. In this video a pretty girl drinks the water from 20 litre can by sucking with her lips.
Story first published: Sunday, April 2, 2017, 14:23 [IST]