இளவரசர் ஸ்டாலின் அரசராகி விட்டார்: குஷ்பூ ட்விட்டரில் வாழ்த்து
ஸ்டாலினுக்கு குஷ்பு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளார்.
Recommended Video

சென்னை: ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பூ வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
திமுகவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

குஷ்பூ ட்விட்டர்
ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் மகிழ்ச்சிகரமான வாழ்த்தினை ஸ்டாலினுக்கு அறிக்கைகள், சமூகவலைதளங்கள் மூலமாக தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் குஷ்பூவும் தனது வாழ்த்தை சொல்லியுள்ளார்.

திமுகவில் குஷ்பூ
திமுகவில் இருந்தபோது, மு.க.ஸ்டாலின் குறித்து சில கருத்துக்களை கூறி சர்ச்சையை ஏற்படுத்தியவர் குஷ்பு. இதனால் குஷ்பு வீட்டை திமுக தொண்டர்கள் தாக்கி அந்த சம்பவம் பெரும் பரபரப்பானது.

கருணாநிதிக்கு இரங்கல்
இந்த நிகழ்வுக்கு பிறகு குஷ்பு திமுவிலிருந்து விலகி காங்கிரசில் சேர்ந்து, அங்கு அவருக்கு கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. குஷ்பூ காங்கிரசில் இருந்தாலும், திமுக மீது அவ்வப்போது கருத்துக்களையும், விமர்சனங்களையும் பதிவிட்டு வந்துள்ளார். கருணாநிதி மறைவின்போதும் அவரது இரங்கலை வருத்தத்தோடு தெரிவித்தார். இந்நிலையில், திமுக தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
|
இளரவசர் அரசரானார்
அந்த பதிவில் ‘'இளவரசர் அரசராகிவிட்டார். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகள். தமிழக மக்கள் தங்களின் எதிர்காலமாக உங்களைப் பார்க்கிறார்கள். விரைவில் மாநிலத்தை வழிநடத்துவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம், நாம் ஒன்றாக இணைந்து நின்றோம். தொடர்ந்து இணைந்திருப்போம், வாழ்த்துகள்'' என்று தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications