தம்மும் இல்லை, செல்லும் இல்லைன்னா எப்படி ஏட்டய்யா.. நிர்வாண கோலத்தில் மிரட்டிய கைதி!
செல்போன், சிகரெட் கேட்டு போலீசாரை கைதி மிரட்டியுள்ளார்
Recommended Video

மதுரை: பாதுகாப்பு போலீசாரையே மிரட்டி திகைத்த வைத்த "ஒரு கைதியின் ரகளை" இது.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜசேகரன். ஒரு வழக்கில் இவர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணைக்காக துப்பாக்கி ஏந்திய போலீசார், ராஜசேகரனை பரமத்திவேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, மீண்டும் சிறைச்சாலைக்கு திரும்ப மதுரை வந்துள்ளனர்.

அதுவரை அமைதியாக இருந்த கைதி ராஜசேகரன் ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் வந்ததும் தன் வேலைய காட்ட ஆரம்பித்தார். பாதுகாப்புக்கு வந்த போலீசாரிடம், செல்போனை கொடுங்க... என் பொண்டாட்டிகிட்ட பேசணும். அப்படியே சிகரெட்டும் வாங்கித்தாங்க' என்றார்.
போலீசார் செல்போனும் கொடுக்கவில்லை, சிகரெட்டும் வாங்கித்தர மறுத்துவிட்டனர். ஆனாலும் ராஜசேகரன் விடவில்லை. தொடர்ந்து பாதுகாப்பு போலீசாரை தொந்தரவு செய்துகொண்டே இருந்தார். இதனால் ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த ராஜசேகரன், பொதுஇடம் என்றும் பாராமல், திடீரென தான் உடுத்தியிருந்த ஆடை முழுவதையும் வேகவேகமாக கழட்டி வீசிவிட்டு நிர்வாணமாக நின்றார்.
இப்போது போலீசாரை பார்த்து, 'டேய் போலீசுகளா, போனும் தரமாட்டீங்க... சிகரெட்டும் தரமாட்டீங்களா? சிகரெட், செல்போன் தரலன்னா, நான் என்னையவே கிழிச்சுக் காயப்படுத்திக்குவேன்... இந்த ஆடைகளையும் உடுத்த மாட்டேன்" என்று மிரட்டல் விடுத்தார்.
ஒரு கணம் ஆடிப்போய் விட்ட போலீசார், என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்தனர். இப்போது ராஜசேகரன் இன்னும் சத்தம் போட்டு பேச ஆரம்பித்தார். "எனக்கு ஏன் சோறு வாங்கி தரவில்லை... பிரியாணி வாங்கித்தாங்க" என்று அடம் பிடிக்க ஆரம்பித்தார். இவ்வளவு நடந்தும் பாதுகாப்பு போலீசார் அவரை சமாதானப்படுத்த பொறுமையாக பேசிக் கொண்டிருந்தனர். ஆனால், ராஜசேகரனோ எதற்கும் ஒத்துவரவில்லை. தொடர்ந்து கூச்சலிட்டு கொண்டே இருந்தார்.
ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் கைதி இப்படி நிர்வாணமாக நின்ற தகராறு செய்கிறார் என்ற தகவலறிந்து ரோந்து போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் ராஜசேகரனுக்கு ஆடைகளை அணிய வைத்தனர். இதுகுறித்து பாதுகாப்பு போலீசார் அளித்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் கைதி ராஜசேகரை மீண்டும் கைது செய்தனர். அத்துடன் போலீசாரை மிரட்டல் விடுத்த காரணத்தால் ராஜசேகரன்மீது 4 பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
கடைசிவரை ராஜசேகரன் கேட்ட செல்போனும் கிடைக்கவில்லை, சிகரெட்டும் கிடைக்கவில்லை, பிரியாணியும் கிடைக்கவில்லை. மேலும் ஒரு வழக்கில் போய் மாட்டிக்கிட்டதுதான் மிச்சம். செல்போன், பிரியாணி கேட்டு ராஜசேகரன் நிர்வாணமாக நின்று அமர்க்களம் செய்யும் காட்சிகளும், போலீசார் அவரை சமாதானப்படுத்தும் காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போலீசாரின் பொறுமை ஓகே... ஆனா ராஜசேகரனுக்கு ஒரு பிரியாணியை வாங்கி தந்திருக்கலாம்!
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு












Click it and Unblock the Notifications