தம்பிக்காக காவலர் தேர்வு எழுதிய சிறை வார்டன்… வேலைக்கு வந்தது உலை
தம்பிக்காக காவலர் தேர்வு எழுதிய சிறை வார்டன் கண்காணிப்பாளரிடம் சிக்கினார். இதனால் அவரது வேலைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி: காவலர் எழுத்து தேர்வில் தம்பிக்காக தேர்வு எழுதியவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள ராமசந்திரபுரத்தை சேர்ந்தவர் வீரபாகு. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் ராஜா என்பவர் கடந்த 2013ம் சிறை காவலர் தேர்வு எழுதி தற்போது வேலூர் மத்திய சிறையில் பணியில் உள்ளார்.

இந்நிலையில் இவரது தம்பி முருகன் படித்து விட்டு சீருடை பணியாளர் தேர்வு எழுத விரும்பினார். தம்பியின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு விடுப்பு எடுத்து ஊர் திரும்பிய ராஜா தனது பணியை மறைத்து தானும் புதிதாக பங்கேற்க விரும்புவதாக கூறி தனக்கும், தனது தம்பிக்கும் அடுத்தத்து விண்ணப்பம செய்தார். இதனால் இருவருக்கும் அடுத்தடுத்து விண்ணப்பம் மற்றும் தேர்வு எண் வழங்கப்பட்டது.
இருவரும் தூத்துக்குடி முள்ளக்காடி பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் தேர்வு எழுதினர். தேர்வு துவங்கியதும் ராஜா தனது விடைத்தாளை விரைவாக நிரப்பி விட்டு தனது தம்பியின் விடைத்தாளை வாங்கி வினாக்களுக்கு பதில் எழுதினார். இவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த கண்காணிப்பாளர் திருச்செந்தூர் கோயில் எஸ்ஐ பிற கண்காணிப்பாளர் உதவியுடன் மடக்கி பிடித்தார். இதில் இருவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அவர்களிடம் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications