கோவையில் புதிய பரபரப்பு.. குண்டு வெடிப்புக் கைதி சிறையில் திடீர் மரணம்!
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்று கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அப்துல் பஷீர் என்ற கைதி மரணம் அடைந்துள்ளார்.
1998ம் ஆண்டு கோவையில் பெரிய அளவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. சுமார் 11 இடங்களில் குண்டு வெடிப்பு நடைபெற்று 46 பேர் வரை உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறி தமிழகத்தில் பலரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தில் தண்டனைப் பெற்று கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் அப்துல் பஷீர். 46 வயதான இவருக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறி மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அப்துல் பஷீரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications