பொது மக்கள் மீன்களை அச்சமின்றி சாப்பிடலாம்..சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்

கடலில் எண்ணெய் கொட்டி பரவி வருவதால் மீன்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

திருவொற்றியூர்: பொதுமக்கள் அச்சமின்றி மீன் உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். எண்ணூரில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

சென்னையை அடுத்த எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கப்பல்கள் மோதியதில் கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. இந்த எண்ணெய் எண்ணூர் பாரதியார் நகரில் 200 மீட்டர் தூரத்திற்கு தேங்கி நிற்கிறது. தொடர்ந்து திருவான்மியூர், பெசன்ட் நகர் வரை எண்ணெய் பரவி வருகிறது. இந்த இடத்தை, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

Minister of fisheries visited Ramakrishna nagar kuppam beach

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அச்சமின்றி மீன் உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்பட்டாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடலோரக் காவல் படையின் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொண்டு கடற்பரப்பில் உள்ள படலங்கள் அகற்றப்பட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+