கம்பம் அருகே ஆட்டோ மீது தனியார் பஸ் மோதி பத்தாம் வகுப்பு மாணவன் மரணமடைந்த சோகம்: வீடியோ
ஆட்டோவில் மூன்று மாணவர்கள் சென்றுகொண்டிருந்த போது பேருந்து ஆட்டோ மீது மோதியதில் மாணவர் முத்து பிரகாஷ் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.
Subscribe to Oneindia Tamil
தேனி: கம்பம் சாமியார்கவுண்டன்பட்டியைச் சேர்ந்த முத்து பிரகாஷ் என்னும் பத்தாம் வகுப்பு மாணவன், ஆட்டோ மீது தனியார் பஸ் மோதியதில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கம்பம் சாமியார்கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மகன் முத்து பிரகாஷ் பத்தாம் வகுப்புப் படித்து வருகிறான். சம்பவத்தன்று முத்து பிரகாஷ், தன் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து பள்ளிக்கு ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தான்.
அப்போது எதிரே வந்த தனியார் பஸ் ஆட்டோ மீது மோதியதில் முத்து பிரகாஷ் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். மற்ற இரண்டு பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் பேருந்து ஓட்டுனரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியே சோகமயமாக உள்ளது.












Click it and Unblock the Notifications