திருப்பூர் அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பெண்கள் பலி - 40 பேர் படுகாயம்
திருப்பூர் அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பெண்கள் பலயாகினர்.
Recommended Video

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பெண்கள் பலியாகி உள்ளனர். இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
சத்தியமங்கலத்தில் இருந்து திருப்பூர் வழியாக தாராபுரம் சென்ற தனியார் பேருந்தும், தாராபுரத்தில் இருந்து திருப்பூரை நோக்கி வந்த தனியார் பேருந்தும் கொடுவாய் அருகில் வந்து கொண்டு இருக்கும் பொழுது இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் பயணம் செய்த இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாயினர். விபத்தை பார்த்த பொதுமக்கள் விபத்தில் பலத்த காயமடைந்து சிதறி கிடந்தவர்களை மீட்டு திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்தப் பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து வந்த ஊதியூர் காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காயம் அடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பேருந்து ஓட்டுநர் செல்போனில் பேசிக்கொண்டு அதிவேகமாக பேருந்தை இயக்கியதால் தான் இந்த விபத்து நடந்துள்ளதாகவும் தெரிவித்தனர். இந்த பேருந்து விபத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.












Click it and Unblock the Notifications