திருப்பூர் அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பெண்கள் பலி - 40 பேர் படுகாயம்
திருப்பூர் அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பெண்கள் பலயாகினர்.
Recommended Video

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பெண்கள் பலியாகி உள்ளனர். இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
சத்தியமங்கலத்தில் இருந்து திருப்பூர் வழியாக தாராபுரம் சென்ற தனியார் பேருந்தும், தாராபுரத்தில் இருந்து திருப்பூரை நோக்கி வந்த தனியார் பேருந்தும் கொடுவாய் அருகில் வந்து கொண்டு இருக்கும் பொழுது இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் பயணம் செய்த இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாயினர். விபத்தை பார்த்த பொதுமக்கள் விபத்தில் பலத்த காயமடைந்து சிதறி கிடந்தவர்களை மீட்டு திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்தப் பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து வந்த ஊதியூர் காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காயம் அடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பேருந்து ஓட்டுநர் செல்போனில் பேசிக்கொண்டு அதிவேகமாக பேருந்தை இயக்கியதால் தான் இந்த விபத்து நடந்துள்ளதாகவும் தெரிவித்தனர். இந்த பேருந்து விபத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications