டாஸ்மாக் எதிர்ப்பு பந்த்.. பள்ளிகள் வழக்கம் போல இயங்குகின்றன.. ஓரிரு இடங்களைத் தவிர
சேலம்: காந்தியவாதி சசிபெருமாள் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையிலும், பள்ளிகளுக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூடக் கோரியும், இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதாக தமிழ்நாடு தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் பள்ளிகள் வழக்கம் போல இயங்குகின்றன.
டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், மது விலக்கை அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சில கட்சிகள் பந்த் அறிவித்துள்ளன.

இந்த நிலையில், இதுகுறித்து அந்த அமைப்பின் மாநில பொது செயலாளர் நந்தகுமார் கூறுகையில், மதுவுக்கு எதிராக போராடி மறைந்த காந்தியவாதி சசிபெருமாள் சுதந்திர இந்தியா என்ற பெயரில் பள்ளி நடத்தி வந்தார். தனியார் பள்ளிகளுக்கான சங்கத்தில் உறுப்பினராகவும் இருந்தார். அவரது கொள்கை அடிப்படையில் தமிழகத்தில் பள்ளிகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை உடனடியாக மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளுக்கு அருகிலேயே டாஸ்மாக் மதுக்கடைகள் இருப்பதால் மாணவர்களும் மதுவுக்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை விட உள்ளனர். தனியார் பள்ளிகள் கூட்டமைப்பில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
ஆனால் தலைநகர் சென்னை உள்பட எங்குமே விடுமுறை விடப்பட்டதாக தெரியவில்லை. சசி பெருமாளின் சொந்த ஊரான சேலத்தில் மட்டும் சில பள்ளிகள் மூடப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications