Exclusive: இறைவி விவகாரம்... கார்த்திக் சுப்பராஜுக்கு தடை... தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு!
சென்னை: இறைவி படத்தில் தயாரிப்பாளர்களை அவமதித்து விட்டதாகக் கூறி, இனி படங்கள் இயக்க கார்த்திக் சுப்பராஜுக்கு தடை விதித்துள்ளது தயாரிப்பாளர் சங்கம்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், எஸ்ஜே சூர்யா, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் இறைவி. இந்தப் படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்தது. அதே நேரம் கலவையான விமர்சனங்களும் வந்தன.
இந்த நேரத்தில்தான் தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து கார்த்திக் சுப்பராஜே எதிர்ப்பாராத ஒரு அதிர்ச்சி இடி விழுந்தது.

படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, அதில் பல காட்சிகள் தயாரிப்பாளர்களுக்கு எதிராக இருப்பதாகவும், தமிழுக்காக குரல் கொடுப்போருக்கு எதிராக உள்ளதாகவும் கூறி கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து ஒட்டு மொத்த தயாரிப்பாளர்களும் படத்துக்கு எதிராக அணி திரண்டனர். இதனால் படத்தை தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஸ்பெஷல் ஷோ போட்டுக் காட்ட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு கேட்டுக் கொண்டார்.
அடுத்த நாள் சனிக்கிழமை ஆர்கேவி தியேட்டரில் இறைவி சிறப்புக் காட்சி போடப்பட்டது. 150க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் இந்தக் காட்சியைப் பார்த்தனர்.
இவர்களில் ஒரு குழுவினர் படத்தில் எந்தெந்த காட்சிகள் தயாரிப்பாளர்களை அவமதிக்கும்படி உள்ளன என்று பட்டியலிட்டனர்.
இதைத் தொடர்ந்து இன்று தயாரிப்பாளர்கள் மீண்டும் சங்கக் கட்டடத்தில் கூடிப் பேசினர். இறுதியில், 'கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பாளர்களை மிகவும் அவமதித்திருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இனி அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் ஒத்துழைக்காது. எந்தத் தயாரிப்பாளரும் அவரை வைத்துப் படம் இயக்கக் கூடாது. அவர் மன்னிப்பு கேட்டாலும் கூட இந்த தடையை விலக்கும் யோசனை இல்லை," என்று ஒருமனதாகத் தீர்மானித்துள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர். மேலும், இறைவி படத்தால் ஏற்படும் நஷ்டத்தை கார்த்திக் சுப்பராஜ்தான் தயாரிப்பாளர்களுக்கு திருப்பித் தரவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications