நிர்மலா தேவியை விசாரிக்க நீதிமன்றத்திடம் அனுமதி கோரப்படும் - சந்தானம் பேட்டி!
நீதிமன்றத்தில் அனுமதி பெற்று பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தப்படும் என்று விசாரணை அதிகாரி சந்தானம் தெரிவித்துள்ளார்.
Recommended Video

மதுரை: புரோக்கர் பேராசிரியை நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்திட்ம் அனுமதி கோரப்படும் என்றும் நீதிமன்ற அனுமதி கிடைத்த பின்னர் நிர்மலாதேவியிடம் உரிய விசாரணை நடத்தப்படும் என்று விசாரணை அதிகாரி சந்தானம் தெரிவித்துள்ளார்.
கல்லூரி மாணவிகளை உயர்அதிகாரிகளுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள பேரம் பேசிய புரோக்கர் பேராசிரியை நிர்மலா தேவி சிபிசிஐடி போலீசாரின் விசாரணை வளையத்தில் உள்ளார். விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் நிர்மலாதேவிக்கு பொது மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அவரிடம் 2வது நாளாக விசாரணை நடத்தி வருகிறது.

மாணவிகளிடம் பேசியது நிர்மலா தேவிதானா, அவரின் நோக்கம் என்ன. எந்த உயர் அதிகாரிக்காக நிர்மலாதேவி இந்த பேரத்தை நடத்தினார் என்பன உள்ளிட்ட கேள்விகளை சிபிசிஐடி போலீசார் முன்வைத்து வருகின்றனர். இதனிடையே நிர்மலாதேவியின் குரல் மாதிரி எடுத்து அதனை சோதிக்கவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே நிர்மலா தேவி விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக ஆளுநர் நியமித்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் குழுவும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் தேவாங்கர் கல்லூரியில் விசாரணை நடத்தினார். 3வது நாளாக சந்தானம் குழு விசாரணை நடத்தி வரும் நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சந்தானம் நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் அனுமதிபெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். நீதிமன்ற அனுமதி கிடைத்தஉடன் நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் இன்று மாலை வரை புகார்கள் வாங்கப்படும் என்றும் சந்தானம் கூறியுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications