ஒரே வீட்டில் தங்கியதால் கூட்டுசதி என கூற முடியாது.. கூட்டுசதிக்கு குமாரசாமி கொடுத்த விளக்கம்!
சென்னை: ஜெயலலிதாவுடன், சசிகலா உட்பட மற்ற, இருவரும் ஒரே வீட்டில் தங்கியதால், அவர்கள் கூட்டாக சதி செய்து சொத்துக்களை வாங்கியதாக முடிவுக்கு வர முடியாது என்று கர்நாடக ஹைகோர்ட் தனது தீர்ப்பில் கூறியிருப்பது கூட்டுசதி குறித்த வழக்குகளில் புதுபார்வையை ஏற்படுத்தியுள்ளது.
சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரை விடுதலை செய்து, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

கூடவே இருந்தால் சதி செய்ய முடியுமா?
வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஜெயலலிதாவுடன், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தங்கியதால், அவர்கள் சதி செய்ததாக கூற முடியாது. சதி நடந்துள்ளது என்பதையும், அந்த சதியில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பங்கு கொண்டனர் என்பதையும், நம்புவதற்கு காரணம் இருக்க வேண்டும்.

கடன்தான்
இந்த வழக்கை பொறுத்தவரை, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கணிசமான தொகையை கடனாக பெற்று, அசையா சொத்துக்களான, விவசாய நிலங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றை வாங்கியிருப்பது, சாட்சியங்கள் மூலம் வெளிப்படுகிறது.

சட்டப்பூர்வம்
அவர்களுக்கு, வந்த வருமான ஆதாரம் சட்டப்பூர்வமானது. அதற்கான நோக்கமும் சட்டப்பூர்வமானது. எனவே, ஜெயலலிதாவுடன் சேர்ந்து, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தங்கியதால் அவர்கள் சதி செய்து, முறையற்ற வகையில் சொத்துக்களை வாங்கியுள்ளனர் என, இந்த நீதிமன்றம் முடிவுக்கு வர முடியாது.
இவ்வாறு நீதிபதி குமாரசாமி உத்தரவில் கூறியுள்ளார்.

புது கோணம்
குமாரசாமியின் இந்த தீர்ப்பு, கூட்டு சதி குறித்த வழக்குகளில், புதிய பார்வையை உருவாக்கலாம். கூட்டாக சதி செய்தோர் வழக்குகளில் அவர்கள் ஒரே வீட்டில் தங்கினார்கள் என்ற ஆதாரம் பிற வழக்குகளிலும் எடுபடாமல் போகலாம் என்று மூத்த வக்கீல்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications