For Daily Alerts
Just In
மாமல்லபுரம் விடுதியில் பாலியல் தொழில்: 2 ஆந்திர பெண்கள் மீட்பு
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் இயக்கி வரும் விடுதி ஒன்றில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட இரண்டு ஆந்திர பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
மாமல்லபுரத்தில் உள்ள பயணிகள் விடுதி ஒன்றில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்குக் கிடைத்த தகவலையொட்டி, போலீசார் சம்பந்தப்பட்ட லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தினர்.
இன்ஸ்பெக்டர் சாரதி தலைமையில் போலீசார் வாலிபர் மேற்கொண்ட சோதனையில் ஒரு அறையில் 2 ஆந்திர பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து விடுதி மேலாளர் நீலகண்டனை கைது செய்த போலீசார், மீட்கப்பட்ட 2 பெண்களையும் மயிலாப்பூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
தப்பியோடிய விடுதி பெண் உரிமையாளர் தெய்வநாயகியைப் போலீசார் தேடி வருகிறார்கள்.
Comments
English summary
In Mamallapuram, the Police have rescued two Andra girls from a lodge, who were involved in prostitution.
Story first published: Monday, February 24, 2014, 17:45 [IST]