ஜல்லிக்கட்டை இழிவுபடுத்திய சுப்பிரமணிய சுவாமிக்கு எதிர்ப்பு... கோவையில் கொடும்பாவி எரிப்பு!
ஜல்லிக்கட்டை இழிவுபடுத்தி பேசிய சுப்பிரமணிய சுவாமியின் கொடும்பாவியை எரித்து கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை: ஜல்லிக்கட்டை இழிவுபடுத்தி பேசிய பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவரது கொடும்பாவியை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் எரித்தனர்.
பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி சுப்பிரமணிய சுவாமி ஜல்லிக்கட்டிற்கு எதிராக பேசி வருகிறார். தனது டுவீட்டர் பக்கத்திலும் அவர் ஜல்லிக்கட்டு குறித்து சர்ச்சை கருத்துகளை கூறி வருகிறார்.

உச்சநீதிமன்றத்தின் தடையை மீறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றால் அரசை கலைத்துவிட்டு, குடியரசு தலைவர் ஆட்சி நடைமுறைப் படுத்தப்படும் என்றார். மேலும் தமிழகத்தில் பொறுக்கிகள்தான் ஜல்லிக்கட்டு வேண்டும் என்கின்றனர் என்ற அர்த்தத்தில் ஒரு பதிவை செய்திருந்தார்.
தமிழக எம்பிக்களை பூனை என்றும் அவர் விமர்சித்திருந்தார். ஜல்லிக்கட்டு தொடர்பான சுப்பிரமணிய சுவாமியின் கருத்து தமிழக மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கோவையில் சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்தினர். அப்போது சுப்பிரமணிய சுவாமிக்கு கண்டனம் தெரிவித்த அவர்கள், அவரது கொடும்பாவியை எரித்தனர்.
இதையடுத்து கொடும்பாவியை எரித்த தந்தைபெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலர் கோவை ராமகிருட்டிணன் உட்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications