புதுவை முதல்வராக நாராயணசாமி..எதிர்ப்பு தெரிவித்து நமச்சிவாயம் ஆதரவாளர்கள் போராட்டம், கல்வீச்சு !
சென்னை: புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வராக நாராயணசாமி இன்று தேர்வு செய்யப்பட்டார். இதன் காரணமாக புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கடந்த 16-ம் தேதி புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி 17 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து, புதுச்சேரி முதல்வரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது.

பின்னர் புதுச்சேரி முதல்வரை தேர்வு செய்வதற்கான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி முதலமைச்சராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இதற்கு புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நமச்சிவாயம் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் விடுதிக்கு வெளியே திரண்ட நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் அந்த வழியாக வந்த அரசு பேருந்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதன் பின்னர் அங்கு வந்த போலீசார் நமச்சிவாயத்தின் ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் நமச்சிவாயம் ஆதரவாளர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் காவல்துறையினர் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.
இதையடுத்து அப்பகுதியில் காவலர்களின் பாதுகாப்புடன் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் நிலவியதால் தனியார் விடுதிக்குள்ளேயே நாராயணசாமி பத்திரமாக தங்க வைக்கப்பட்டு பின்னர் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டார்.
பல இடங்களில் நாராயணசாமிக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருவதால் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வஜ்ரா வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கண்ணீர் புகைக் குண்டுகளை வீசுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 10 நாட்களாகியும் புதுச்சேரி முதல்வர் யார் என்பதை முடிவு செய்வதில் பெரும் இழுபறி நீடித்து வந்த நிலையில், தற்போது முதல்வரை தேர்வு செய்த பின்னரும் போராட்டங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications