நெல்லையில் கோக் குளிர்பான ஆலையை தடை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: திருநெல்வேலியில் இயங்கும் கோக் குளிர்பான ஆலையை தடைசெய்யக் கோரி தேமுதிக, தமாகா, இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள், வணிகர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி, கங்கைகொண்டான் சிப்காட்டில் கோக் குளிர்பான ஆலை இயங்கி வருகிறது. இந்நிலையில், அங்கு 36 ஏக்கர் பரப்பளவில் பெப்சி குளிர்பான ஆலைக்கான அனுமதியையும் தற்போது தமிழக அரசு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

 protest in nellai for banned coke factory

இந்த ஆலைக்கு தாமிரபரணி நதியிலிருந்து தினமும் 9 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், நாள் ஒன்றுக்கு பல லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படுவதாகவும், எனவே இந்த அனுமதியை தமிழக அரசு ரத்து செய்யகோரியும் வணிகர் சங்க பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக, தமாகா, இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள், வணிகர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+