சென்னை ஐஓசி தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்து போராட்டம்- வேல்முருகன் உட்பட 250 பேர் கைது
சென்னையில் ஐஓசி தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்து போராட்டம் நடத்திய வேல்முருகன் உள்ளிட்ட 250 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video

சென்னை : சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்து முற்றுகைப் போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட 250 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் பவனை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையில் அக்கட்சியினர் முற்றுகையிட்டனர்.

வேல்முருகன் உள்ளிட்டோர் இந்தியன் ஆயில் பவனுக்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களை அங்கிருந்து போலீசார் வெளியேற்றினர்.

அப்போது மக்களின் போராட்டங்களை கண்டுகொள்ளாத மத்திய அரசைக் கண்டித்து அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். பின் போராட்டத்தில் ஈடுபட்ட வேல்முருகன் உள்ளிட்ட 250 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.













Click it and Unblock the Notifications