நரபலி விவகாரம்... பி.ஆர்.பழனிச்சாமியை துருவித் துருவி விசாரித்த மதுரை போலீஸ்
மதுரை: மதுரையில் நரபலி கொடுக்கப்பட்டது தொடர்பான வழக்கி் பிஆர்பி கிரானைட்ஸ் அதிபர் பி.ஆர். பழனிச்சாமியிடம் மேலூர் கீழவளவு போலீஸார் ஐந்தரை மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.
பிஆர்பி கிரானைட்ஸ் நிறுவனத்தினர் மன நலம் பாதித்தவர்களை நரபலி கொடுத்து சுடுகாட்டில் புதைத்ததாக சேவற்கொடியான் என்பவர் சகாயம் ஐஏஎஸ்ஸிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து அவர் குறிப்பிட்ட இடத்தை தோண்டிப் பார்த்தபோது நான்கு எலும்புக் கூடுகள் சிக்கின. இதையடுத்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்குப் பரிந்துரைத்தார் சகாயம்.

அதன் பேரில் கீழவளவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பி.ஆர். பழனிச்சாமி, ஊழியர்கள் அய்யப்பன், ஜோதிபாசு, ஜே.சி.பி. டிரைவர் பரமசிவம் ஆகிய 4 பேர் மீது தடயங்களை அழித்தல், சந்தேக மரணம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக கீழவளவு போலீசில் ஆஜராகுமாறு அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இதை ஏற்று கடந்த 15ம் தேதி ஜோதிபாசு, அய்யப்பன் இருவரும் போலீசில் ஆஜரானார்கள். 16ம் தேதி டிரைவர் பரமசிவம் ஆஜரானார். இவர்கள் அனைவரும் விசாரணைக்குப்பின் அனுப்பி வைக்கப்பட்டனர். விசாரணை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. அவர்களது வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டன.
நேற்று பிற்பகலில் பி.ஆர்.பி. ஆஜரானார். அவருடன் 3 வக்கீல்களும் வந்தனர். பி.ஆர்.பியிடம் கூடுதல் எஸ்.பி மாரியப்பன், டிஎஸ்பி மங்களேஸ்வரன், தாசில்தார் கிருஷ்ணன் உள்ளிட்டோர் அடங்கிய குழு விசாரணை நடத்தியது. கிட்டத்தட்ட ஐந்தரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இரவு 8 மணியளவில் விசாரணை முடிந்து அனுப்பி வைக்கப்பட்டார் பழனிச்சாமி.
-
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications