நரபலி விவகாரம்... பி.ஆர்.பழனிச்சாமியை துருவித் துருவி விசாரித்த மதுரை போலீஸ்
மதுரை: மதுரையில் நரபலி கொடுக்கப்பட்டது தொடர்பான வழக்கி் பிஆர்பி கிரானைட்ஸ் அதிபர் பி.ஆர். பழனிச்சாமியிடம் மேலூர் கீழவளவு போலீஸார் ஐந்தரை மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.
பிஆர்பி கிரானைட்ஸ் நிறுவனத்தினர் மன நலம் பாதித்தவர்களை நரபலி கொடுத்து சுடுகாட்டில் புதைத்ததாக சேவற்கொடியான் என்பவர் சகாயம் ஐஏஎஸ்ஸிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து அவர் குறிப்பிட்ட இடத்தை தோண்டிப் பார்த்தபோது நான்கு எலும்புக் கூடுகள் சிக்கின. இதையடுத்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்குப் பரிந்துரைத்தார் சகாயம்.

அதன் பேரில் கீழவளவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பி.ஆர். பழனிச்சாமி, ஊழியர்கள் அய்யப்பன், ஜோதிபாசு, ஜே.சி.பி. டிரைவர் பரமசிவம் ஆகிய 4 பேர் மீது தடயங்களை அழித்தல், சந்தேக மரணம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக கீழவளவு போலீசில் ஆஜராகுமாறு அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இதை ஏற்று கடந்த 15ம் தேதி ஜோதிபாசு, அய்யப்பன் இருவரும் போலீசில் ஆஜரானார்கள். 16ம் தேதி டிரைவர் பரமசிவம் ஆஜரானார். இவர்கள் அனைவரும் விசாரணைக்குப்பின் அனுப்பி வைக்கப்பட்டனர். விசாரணை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. அவர்களது வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டன.
நேற்று பிற்பகலில் பி.ஆர்.பி. ஆஜரானார். அவருடன் 3 வக்கீல்களும் வந்தனர். பி.ஆர்.பியிடம் கூடுதல் எஸ்.பி மாரியப்பன், டிஎஸ்பி மங்களேஸ்வரன், தாசில்தார் கிருஷ்ணன் உள்ளிட்டோர் அடங்கிய குழு விசாரணை நடத்தியது. கிட்டத்தட்ட ஐந்தரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இரவு 8 மணியளவில் விசாரணை முடிந்து அனுப்பி வைக்கப்பட்டார் பழனிச்சாமி.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications