தொடரும் காவல்துறையினரின் அத்துமீறல்.. பரிதாபமாக பறிபோகும் அப்பாவி உயிர்கள்!
காவல்துறையினரின் அத்துமீறலால் அப்பாவி பொதுமக்களின் உயிர்கள் பரிதாபமாக பறிபோவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

சென்னை: காவல்துறையினரின் தொடர் அத்துமீறலால் அப்பாவி பொதுமக்களின் உயிர்கள் பரிதாபமாக பறிபோவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல் துறையின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்களிடம் நடந்துகொள்ளும் விதம் முகம் சுளிக்க வைக்கிறது.
வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் கேட்டு போக்குவரத்து போலீசார் பெரும் தொல்லை கொடுத்து வருகின்றனர். அதிகார திமிரால் எந்த உச்சத்துக்கும் செல்லலாம் என்ற போலீசாரின் நடவடிக்கைகள் அப்பாவி பொதுமக்களின் உயிர்களை பறித்து வருகிறது.

வைரலாகும் வீடியோக்கள்
உயிர்க்காக்கும் ஹெல்மெட், சீட் பெல்ட் போன்றவற்றை அணியவில்லை எனக்கூறி போலீசார் பொதுமக்களின் உயிரை குடிப்பது வாடிக்கையாகிவிட்டது. காவல்துறையினர், போக்குவரத்து காவலர்கள் லஞ்சம் வாங்கும் காட்சிகள், தகாத வார்த்தையால் பேசுவது, விரட்டிச் சென்று தாக்குவது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

குடல் சரிந்து பலியான இளைஞர்
ஆனாலும் காவல்துறையினரின் இந்த முரட்டுத்தனத்தை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்னை கேகே நகரில் போலீசார் விரட்டியதில் சென்டர் மீடியனில் இருசக்கர வாகனம் மோதி இளைஞர் ஒருவர் குடல் சரிந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

லத்தியால் தாக்கிய போலீஸ்
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் அண்மையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அவ்வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி பணம் கேட்டு மிரட்டினர். இதை செல்போனால் படம் பிடித்த இளைஞர்கள் இரண்டு பேரை போலீசார் லத்தியால் தாக்கினர்.

இலவச உணவு கேட்டு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இலவச உணவு கேட்டு ஓட்டல் ஊழியரை காவல்துறையினர் கடுமையாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

தீக்குளித்த ஓட்டுநர்
தரமணியில் கடந்த மாதம் 21-ம் தேதி சீட் பெல்ட் அணியாமல் வந்ததாக கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் மணிகண்டனை போலீசார் ஆபாச வார்த்தைகளால் பேசி தாக்கினர். இதனால் மனமுடைந்த மணிகண்டன் போலீசார் முன்னிலையில் தீக்குளித்து உயிரிழந்தார்.

லாரியில் சிக்கிய இளைஞர்
இதைத்தொடர்ந்து சென்னை அம்பத்தூர் பகுதியில் ஹெல்மட் அணியாமல் சென்ற இளைஞரை போலீசார் விரட்டி சென்றதில் லாரியில் சிக்கி அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கர்ப்பிணி பெண் பலி
இந்நிலையில் நேற்று மாலை ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் எட்டி உதைத்ததில் கீழே விழுந்து உஷா என்ற கர்ப்பிணி பெண் சம்பவ இடத்திலேயே பலியானர். அவரது வயிற்றில் இருந்த சிசுவும் பரிதாபமாக உயிரிழந்தது.

அரசுக்கு கோரிக்கை
போலீசாரின் இந்த கொலை வெறி நடவடிக்கைகள் பொது மக்களிடையேயும் வாகன ஓட்டிகளிடையேயும் மரண பயத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் காட்டுமிராண்டித்தனத்தை தடுக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
விஜய் ஆட்சியிலும் காவல்துறை அத்துமீறல்! தென்காசியில் போலீஸ் தாக்கியதில்.. விவசாயி சோக முடிவு! -
போலீசாரிடம் இருந்து எஸ்கேப் ஆகி 'கருப்பு' படம் பார்த்த கைதி.. தியேட்டர் இன்டர்வெல்லில் கிளைமாக்ஸ்! -
விவசாயி எடுத்த சோக முடிவு.. தென்காசி சிவகிரி இன்ஸ்பெக்டர் மீது பாய்ந்த ஆக்ஷன்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications