இயற்கைக்கு மாறான உறவு... புதுச்சேரி பேராசிரியர் மீது மனைவி வழக்கு

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரியில் இயற்கைக்கு மாறான வகையில் மனைவியுடன் உறவு வைத்ததாக கல்லூரி பேராசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

புதுச்சேரி பாக்கமுடையான்பட்டைச் சேர்ந்தவர் கிருத்திகா. இவரது கணவர் தாமரை மணவாளன். தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறார்.

கடந்த 2012 இல் திருமணம் நடந்தது. சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இந்த நிலையில், புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கிருத்திகா தாக்கல் செய்த மனுவில் ''கணவர் தன்னுடன் இயற்கைக்கு மாறாக தாம்பத்ய உறவு வைத்திருந்தார்.

திருமணத்தின் போது வழங்கப்பட்ட 75 சவரன் நகைகள் மற்றும் 5 லட்சம் ரூபாயை மாமனாரும் மாமியாரும் தர மறுக்கின்றனர்'' என கூறியிருந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரிக்க புதுச்சேரி மகளிர் போலீசாருக்கு நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டு உள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+