புதுச்சேரியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் டெங்கு காய்ச்சலுக்கு பலி!
புதுச்சேரியில் ரத்தப் பரிசோதனை பிரிவில் பணியாற்றி வந்த இந்துமதி என்பவர் டெங்குக் காய்ச்சலால் பலியானார். இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறவிருந்தது.
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட தனியார் மருத்துவமனை ஊழியர் இந்துமதி டெங்கு காய்ச்சலுக்கு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்தவர் இந்துமதி. இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் ரத்த பரிசோதனை பிரிவில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

அதனையடுத்து மருத்துவமனையில் பரிசோதித்துப் பார்த்ததில் டெங்குக் காய்ச்சல் என கண்டுபிடிக்கபப்ட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்துமதிக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கபப்ட்ட நிலையில் அவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications