புதுமைப்பித்தனின் 2 சிறுகதைகள் சென்னை பல்கலை. பாட திட்டத்தில் நீக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை பல்கலைக் கழகத்தின் பாடத் திட்டத்தில் இருந்து பிரபல எழுத்தாளர் புதுமைப்பித்தனின் 2 சிறுகதைகளை நீக்கும் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்கலைக் கழகத்தின் பாடத் திட்டத்தில் இருந்து புதுமைப்பித்தனின் துன்பக்கேணி மற்றும் பொன்னகரம் ஆகிய சிறுகதைகளை நீக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தலித் மக்களை விமர்சிப்பதாக துன்பக்கேணி சிறுகதை இருக்கிறது என்பதால் அதை நீக்க முடிவு செய்திருப்பதாக பல்கலைக் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேபோல் பொன்னகரம் என்ற புதுமைப்பித்தனின் மற்றொரு சிறுகதையும் நீக்கப்பட்டுள்ளது. இதில் அடித்தட்டு மக்களின் வாழ்வுநிலை சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இந்த இரு சிறுகதைகளும் 1930களில் மணிக்கொடி ஏட்டில் வெளியானவை. இதில் துன்பக்கேணி 1935ஆம் ஆண்டு வெளியானது.












Click it and Unblock the Notifications