மக்கள் பிரச்சனையை பேச முடியல: சட்டசபையை புறக்கணித்த புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி

புதிய தமிழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இன்று சட்டசபை நிகழ்ச்சிகளை புறக்கணித்துள்ளன.
இந்நிலையில் இது குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கூறுகையில்,
சட்டசபையில் மக்கள் பிரச்சனையை பற்றி பேச போதிய நேரம் கொடுப்பதில்லை. இன்றைய கூட்டத்தில் நீலாங்கரை காவல் நிலையத்தில் முஸ்லிம் சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, செவிலியர் பயிற்சி மாணவிகளின் போராட்டம். கூடங்குளம் அணு உலையை எதிர்த்து போராடுபவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவது உள்ளிட்டவை பற்றி பேச இருந்தோம்.
ஆனால் முன்னதாக நான் பேசுகையில் 28 நிமிடங்கள் பேசியதாகவும், மேற்கொண்டு நேரம் ஒதுக்க முடியாது என்றும் கூறி எனக்கு பேச அனுமதி மறுத்துவிட்டனர். ஆனால் நான் வெறும் 12 நிமிடம் தான் பேசியிருந்திருப்பேன். அமைச்சர்களின் குறுக்கீடு அதிகம் உள்ளதால் எங்களுக்கு பேச அதிகமாக வாய்ப்பு கிடைப்பதில்லை.
முஸ்லிம்கள் இடஒதுக்கீடு, ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு உள்ளிட்டவை பற்றி விவாதிக்க முடியாததால் நாங்கள் இன்று சட்டசபை நிகழ்ச்சிகளை புறக்கணித்துவிட்டோம் என்றார்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. கூறுகையில்,
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து ஆளுங்கட்சி உறுப்பினர் பேசுகையில், சம்பந்தமே இல்லாமல் அவையில் இல்லாதவர்களை பற்றி எல்லாம் பேசுகிறார். இதற்கு பதில் அளிக்க முயன்ற திமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் அவையை புறக்கணித்துள்ளனர். இதே போன்று தேமுதிகவும் அவையை புறக்கணித்துள்ளது.
சட்டசபையில் தங்கள் பிரச்சனைகள் பற்றி பேசப்பட வேணடும் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் எங்களால் மக்கள் பிரச்சனைகள் பற்றி முழுமையாக பேச முடியவில்லை. அப்படியே பேசினால் உடனே அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிடுகின்றனர். அதனால் தான் புதிய தமிழகம் இன்று அவையை புறக்கணித்துள்ளது என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications