For Daily Alerts
Just In
பஞ்சாப் குற்றவாளி சென்னையில் கைது – கப்பலில் தப்பி ஓட திட்டமிட்டபோது சிக்கினார்
சென்னை: பஞ்சாப்பை சேர்ந்த குற்றவாளி ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் அமர் என்ற இளைஞர். அங்கு இவருக்கு பல்வேறு வழக்குகளில் தொடர்பு உள்ளது. எனவே அவரை தேடப்படும் குற்றவாளியாக பஞ்சாப் போலீஸ் அறிவித்துள்ளது.
இவரது போட்டோ அனைத்து மாநில போலீசாருக்கும், சுங்க இலாகா துறைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை எண்ணூர் துறைமுகத்துக்கு ஒரு எண்ணைக் கப்பல் வந்தது.
அதில், சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அங்கு அமர் சிப்பந்தி ஆக வேலை பார்ப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தேடப்படும் குற்றவாளி ஆன அவரை கைது செய்து துறைமுகம் போலீசில் ஒப்படைத்தனர்.
அங்கு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றிய தகவல் பஞ்சாப் போலீசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
Punjab accuse arrested in Chennai yesterday. He is involved in many crimes in Punjab.
Story first published: Tuesday, April 29, 2014, 15:43 [IST]