பட்டயப் படிப்பில் தங்கப்பதக்கம் பெற்ற கைதி – புழல் சிறையில் பட்டமளிப்பு விழா
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை புழல் சிறையில் உள்ள 24 கைதிகளுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இந்திய சமுதாய கல்லூரிகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையம் தமிழகம் முழுவதும் சிறைக் கைதிகளுக்கு கல்வி வாய்ப்புகளை வழங்கி வருகின்றது.
அதன் அடிப்படையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 24 சிறைக் கைதிகளுக்கு ஒரு வருட ஆயத்த ஆடை பயிற்சி அளிக்கப்பட்டது.
அந்த பயிற்சியை நிறைவு செய்த கைதிகளுக்கு பட்டமளிப்பு விழாவும், 34 சிறை கைதிகளுக்கு சமையல் உதவியாளர் பட்டய படிப்பிற்கான தொடக்க விழாவும் புழல் சிறை வளாகத்தில் நடைபெற்றது.
மேலும் 4 சக்கர வாகன பழுதுபார்ப்பு பட்டய படிப்பில் மாநில அளவில் தங்க பதக்கம் பெற்ற நேசமணி, முதல்நிலை தேர்ச்சி பெற்ற ராஜ்குமார் மற்றும் பாஸ்கர் ஆகியோருக்கு பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications