தமிழகத்தில் தேமுதிக- மநகூ அணி ஆட்சியைக் கைப்பற்றும்- திருமாவளவன்
அரியலூர்: தமிழகத்தில் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி அணி ஆட்சியைக் கைப்பற்றும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதியில் தொல். திருமாவளவன் போட்டியிடுகிறார். அவர் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் அங்கனூரில் தமது தாயாருடன் சென்று வாக்களித்தார்.

வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:
தமிழகத்தின் புதிய வாக்காளர்கள், தேமுதிக- மக்கள் நலக்கூட்டணி அணியை ஆதரிக்கிறார். தமிழகத்தில் தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்.

இதன் மூலம் அரை நூற்றாண்டுகால அரசியல் அடியோடு மாற்றப்படும். அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி தேர்தல் ரத்து செய்திருப்பதால் எந்த பயனும் இல்லை.

அனைத்து தொகுதிகளிலும் அதிமுக, திமுக அணியினர் பணம் கொடுத்து மக்களை களங்கப்படுத்திவிட்டனர்; தங்களது ஊழலை மறைக்க மக்கள் மீது ஊழல் சேற்றைப் பூசிவிட்டனர்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.












Click it and Unblock the Notifications