ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் - புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என புதிய தலைமுறை டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி புதிய தலைமுறை டிவி கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது. அதில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அதன்படி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா ? என கேட்கப்பட்ட கேள்விக்கு ஆம் என 57.04% பேரும், இல்லை என 21.25% பேரும், கருத்துக் கூற விரும்பவில்லை என 21.17% பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசின் நிர்வாகத்தில் மத்திய அரசின் தலையீடு இருப்பதாக நினைக்கிறீர்களா? என்ற மற்றொரு கேள்விக்கு ஆம் என 46.14% பேரும், இல்லை என்று 19.80% பேரும், கருத்துக் கூற விரும்பவில்லை என 34.06% பேரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

அதேபோல் அதிமுக எம்எல்ஏக்கள் சசிகலாவை ஆதரிப்பது மக்கள் எண்ணத்திற்கு விரோதமானதா? என்ற கேள்விக்கு ஆம் என 65.03% பேரும், இல்லை என 16.80% பேரும், 18.17 % பேர் கருத்துக் கூற விரும்பவில்லை எனவும் பதிலளித்துள்ளனர்.













Click it and Unblock the Notifications