தேர்தல் நேரத்தில் மைக்செட்காரர்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் தான் விஜயகாந்துக்கும்: ராதாரவி

Subscribe to Oneindia Tamil

பழனி: தேர்தல் நேரத்தில் மைக்செட்காரர்கள், மேடை போடுபவர்கள், கொடி தோரணம் கட்டுபவர்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் இருக்குமோ அதே அளவு முக்கியத்துவம் தான் விஜயகாந்துக்கும் இருக்கிறது என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆதரவாளரான நடிகர் ராதாரவி பழனிக்கு வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். செய்தியாளர்கள் அவரிடம் தேர்தல் கூட்டணி, பிரச்சாரம் பற்றி கேட்டனர்.

அதற்கு அவர் கூறுகையில்,

அதிமுக ஆட்சி

அதிமுக ஆட்சி

கடந்த சட்டசபை தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை எல்லாம் அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது. இது தவிர அம்மா உணவகம், அம்மா மருந்தகம் என பல நலத்திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தியுள்ளார். இதனால் வரும் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும்.

சரத்குமார்

சரத்குமார்

பிரச்சாரம் செய்யுமாறு அதிமுகவில் அழைத்தால் நிச்சயம் பிரச்சாரம் செய்வேன். நான் அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்வதன் மூலம் எனக்கும், சரத்குமாருக்கும் இடையே உள்ள நட்புக்கு பாதிப்பு வராது. அவர் பாஜக கூட்டணியில் உள்ளார். நட்பு வேறு, அரசியல் வேறு.

திருமா

திருமா

திராவிடக் கட்சிகளை ஒழிப்பேன் என்று திருமாவளவன் கூறி வருகிறார். அப்படி என்றால் மதிமுக திராவிடக் கட்சி இல்லையா?

விஜயகாந்த்

விஜயகாந்த்

தேர்தல் நேரத்தில் மைக்செட்காரர்கள், மேடை போடுபவர்கள், கொடி தோரணம் கட்டுபவர்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் இருக்குமோ அதே அளவு முக்கியத்துவம் தான் விஜயகாந்துக்கும் இருக்கிறது.

தனித்துப் போட்டி

தனித்துப் போட்டி

சட்டசபை தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனியாக போட்டியிட வேண்டும். அப்படி போட்டியிட்டால் தான் அவற்றின் பலம் என்னவென்று தெரியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+