கேரளா கொண்டு செல்லப்பட்ட நிவாரணப் பொருட்களை திருச்சியில் இறக்கி விட்ட அதிகாரிகளால் பரபரப்பு!
Recommended Video

திருச்சி: மாணவர்கள், மக்கள் சேமித்த நிவாரண பொருட்களை ரயிலில் கொண்டு செல்ல இலவசம் என்ற போதிலும் திருவாரூரில் உள்ள கேரள மாணவர்கள் கொண்டு சென்ற நிவாரண பொருட்களை திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டதால் அதிகாரிகளுடன் மாணவர்கள் வாக்குவாதம் செய்தனர்.
கேரளத்தில் வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா முழுவதும் உதவிகள் செய்து வருகின்றனர். பணமாகவோ காசோலையாகவோ மக்கள் உதவி செய்து வருகின்றனர்.

இதுமட்டுமல்லாமல் மற்ற மாநில அரசுகளும் உதவிகளை செய்கின்றனர். தமிழகத்தில் இருந்து ஏராளமான நிவாரண பொருட்கள் கேரளத்துக்கு செல்கின்றன. அவ்வாறு நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதுபோல் ரயில் மூலம் நிவாரண பொருட்களை ஏற்றிச் சென்றால் அதற்கு இலவசம் என்று ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் படிக்கும் கேரள மாநிலத்து மாணவர்கள் தாங்கள் சேமித்த ரூ. 2 லட்சம் மதிப்பிலான 105 பண்டல்களில் சுற்றப்பட்ட நிவாரண பொருட்களை எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு சென்றனர்.
நிவாரண பொருட்களுக்கு டிக்கெட் இல்லாத போதிலும் ரயில்வே அதிகாரிகள் அந்த பொருட்களை திருச்சி ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டனர். மேலும் மாணவர்களால் சேகரிக்கப்பட்டதை ரயில்வே துறை சார்பில் சேகரிக்கப்படும் நிவாரண பொருட்களாக மாற்றம் செய்து அதனை கொண்டு சேர்க்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
நிவாரண பொருட்களை நாங்களே உரிய முறையில் கொண்டு செல்கிறோம் என கேரள மாணவர்கள் ரயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், ரயில்வே துறை சார்பில் இலவசமாக நிவாரண பொருட்களை கொண்டு செல்ல அனுமதி அளித்தும் ரெயில்வே அதிகாரிகளின் சுயநல போக்கினால் பொருட்களை கொண்டு சேர்க்க முடியாதோ என்று மாணவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
-
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது!












Click it and Unblock the Notifications