ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - சிபிசிஐடி சப். இன்ஸ்பெக்டர் கைது

ஈரோடு அருகே ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் உதகை சிபிசிஜடி சிறப்பு உதவி ஆய்வாளரை ஈரோடு ரயில்வே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு : ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக சிபிசிஜடி சிறப்பு உதவி ஆய்வாளரை ஈரோடு ரயில்வே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டரின் பெயர் சந்திரசேகர் என்பதாகும். இவர் உதகை சிபிசிஐடியில் உதவி ஆய்வாளராக பணி செய்து வருகிறார்.

Railway Police arrest CBCID Sub inspector againt sexual assault case

நேற்றிரவு சென்னையில் இருந்து கோவைக்கு நீலகிரி விரைவு ரயிலில் கர்ப்பிணி பெண் ஒருவர் தனது கணவருடன் பயணித்துள்ளார். அதே ரயிலில் சென்ற உதவி ஆய்வாளர் சந்திரசேகர் பயணித்தார். ஈரோடு அருகே வந்த போது அந்த பெண்ணுக்கு சந்திரசேகர் பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அந்தப் பெண் கூச்சலிட்டதும் மது போதையில் இருந்த சந்திரசேகரைப் பிடித்து அப்பெண்ணின் கணவர் ஈரோடு ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து ஈரோடு ரயில்வே காவல்துறையினர் சந்திரசேகரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+