For Daily Alerts
Just In
சென்னையில் மழை.. புறநகர்களில் தூறல்
சென்னை: சென்னை நகரின் பல பகுதிகளில் இன்று மாலை நல்ல மழை பெய்தது. அதேசமயம் புறநகர்ப் பகுதிகளில் விட்டு விட்டுத் தூறல் மழை பெய்தது.
சென்னையில் கடந்த சில நாட்களாக பகலில் நல்ல வெயிலும், மாலையில் நல்ல காற்றுமாக உள்ளது. சில நேரங்களில் மழை பெய்கிறது.
இந்த நிலையில் இன்று மாலை சென்னை நகரின் பல பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. இதனால் ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் போல நீர் ஓடியது.
அதேசமயம், பல்லவாரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பிற புறநகர்ப் பகுதிகளில் மழையைக் காணவில்லை. மாறாக விட்டு விட்டுத் தூறல் காணப்பட்டது.
Comments
English summary
A brief Rain brought some cheers to Chennai this evening.
Story first published: Sunday, September 7, 2014, 17:02 [IST]