தாம்பரத்தில் தயார் நிலையில் படகுகள்- மீண்டும் வேலையைக் காட்டத் துவங்கிய மழை!
தாம்பரம்: தாம்பரம் மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் கொட்டும் மழையால் மீட்புப் பணிகளுக்காக படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
சென்னை புறநகர் பகுதிகளில் சமீபத்தில் பெய்த கன மழையில் தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் வெள்ளம் பாதித்த இடங்களில் மழைநீர் வடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பியதால் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் மக்கள் திரும்ப தொடங்கி விட்டனர்.
மழைநீரை வெளியேற்ற தாம்பரம் கிஷ்கிந்தா சாலை சமத்துவ பெரியார் நகரில் அடையாறு கால்வாய் 60 மீட்டர் அகலப்படுத்தும் பணிகள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருவதால் மழை வெள்ளநீர் தேங்காமல் சென்று வருகிறது. தாழ்வான பகுதிகளில் மட்டும் தொடர்ந்து மழைநீர் தேங்கி இருக்கிறது.

மீண்டும் தொடங்கிய மழை:
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மழை மீண்டும் தொடங்கியுள்ளது. நேற்று தாம்பரம் பெருங்களத்தூர், செம்பாக்கம், மாடம்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பலத்த மழை தொடர்ந்தால் இப்பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படும் சூழல் நிலவுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு படகுகள் தயார் நிலையில் தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டுள்ளது

தயார் நிலையில் படகுகள்:
இது தொடர்பாக தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர், "தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் இருக்கிறோம். தீயணைப்பு துறை படகுகளுடன் 50 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். 6 மீன்வளத்துறை படகுகள் தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தயாராக உள்ளது.

வெள்ள பாதிப்பு கட்டுப்பாட்டு அறை:
உள்ளாட்சி அமைப்புகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டவர்களை தங்க வைக்கவும் தயாராக உள்ளோம். 24 மணி நேரம் செயல்படும் வெள்ள பாதிப்பு அவசர கட்டுப்பாட்டு அறை தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

மிரட்டும் மழை:
ஏற்கனவே வெள்ள பாதிப்பில் வீடுகளில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வீணான நிலையில் தற்போது தான் அவைகளை பொதுமக்கள் பழுது பார்த்து சீரமைத்த நிலையில் தற்போது மீண்டும் மிரட்டும் மழை பொதுமக்களை கவலை அடைய செய்துள்ளது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications