3 நாட்களுக்கு சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் நீடிப்பதால் 3 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வழக்கத்தை விட இந்தாண்டு வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து கொண்டிருக்கிறது. தொடர் கனமழையால் சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்கள் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளது. மழை எப்போது குறையும், மீண்டும் எப்போது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பப் போகிறோம் என்ற ஏக்கம் எல்லோர் முகத்திலும் வெளிப்படையாகவே தெரிகிறது.

இந்நிலையில், குமரி கடல் பகுதியில் நேற்று முன்தினம் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு நோக்கி நகர்ந்து லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிக்கு சென்றுள்ளது. புதிதாக நேற்று முன்தினம் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுநிலை தமிழ்நாடு அருகே உள்ள தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் நேற்று அனேக இடங்களில் மழை பெய்தது. மேலும், அடுத்த 3 நாட்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை அல்லது மிக கனமழை பெய்யும். தமிழகத்தின் அனேக இடங்களில் மழை பெய்யும்.
இந்த காற்றழுத்தம் காரணமாக நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என பிபிசியின் வானிலை செய்திகள் தெரிவித்துள்ளது.
இன்னும் வெள்ள பாதிப்பில் இருந்து மீளாத மக்கள் மீண்டும் கனமழை பெய்யும் என்ற எச்சரிக்கையால் பீதிக்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் கடந்த சில நாட்களாக மழையளவு குறைந்து, வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளது. மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைத் திரும்பி வருகிறது. இந்த சூழ்நிலையில் மீண்டும் கனமழை என்ற அறிவிப்பு சென்னை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
பாபநாசத்தில் 130 மிமீ மழை பெய்துள்ளது. சோழவரம் 70 மிமீ, பட்டுக்கோட்டை, தாமரைப்பாக்கம், சத்திரப்பட்டி, திருவள்ளூர், திருவாலங்காடு, மதுக்கூர், வேதாரண்யம் 60 மிமீ, செங்குன்றம், பழனி, பூண்டி, அதிராம்பட்டினம், வேடச்சந்தூர், பூந்தமல்லி, திண்டுக்கல், மணப்பாறை, பொன்னேரி, உடுமலைப் பேட்டை 50 மிமீ, காமாட்சிபுரம், ராதாபுரம், மணல்மேல்குடி, புழல், மணிமுத்தாறு, செம்பரம்பாக்கம், முத்துப்பேட்டை, மாதவரம், சென்னை டிஜிபி அலுவலகம், சென்னை விமான நிலையம், திருமயம், ராமேஸ்வரம், தாம்பரம், சிதம்பரம், வடசென்னை 30 மிமீ மழை பெய்துள்ளது.
-
இடி, மின்னலுடன் மழை.. ரெடியா இருங்க மக்களே! வானிலை மையம் ஜில் அப்டேட் -
சென்னையில் 100 டிகிரியை தொடும் வெயில்! வார்னிங் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை












Click it and Unblock the Notifications