சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை !

Subscribe to Oneindia Tamil

சென்னை: பலத்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து கொட்டி வரும் கனமழை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

rain hits chennai,kanchipuram,thiruvallur,vellore schools holiday

தொடர் மழையால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் சுந்தரவல்லி, கஜலட்சுமி, வீரராகவராவ் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

கனமழையின் காரணமாக வேலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்த மாவட்ட கலெக்டர் நந்தகோபால் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.நாளை வரை நடைபெறவிருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+