காவேரி மருத்துவனை, கோபாலபுரம் பகுதியில் மழை.. அசையாத தொண்டர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: காவேரி மருத்துவமனை அமைந்துள்ள பகுதியில் மாலை முதல் மழை பெய்யத் துவங்கியுள்ளது. இந்த மழைக்கு நடுவே நனைந்தபடி திமுக தொண்டர்கள் கருணாநிதி வாழ்க என்று கோஷம் எழுப்பியபடி உள்ளனர்.

பெண் தொண்டர்கள் அழுது புலம்பியபடி உள்ளனர். கருணாநிதியின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை இன்று மாலை 4.30 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து காவேரி மருத்துவமனையை சுற்றிலும் தொண்டர்கள் கூட்டம் பத்தாயிரத்துக்கும் மேல் அதிகரித்துவிட்டது. இந்த நிலையில்தான் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. கோபாலபுரம் இல்லத்திலும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் அங்கு குவிந்துள்ள தொண்டர்களும் அவதிப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications