நேற்று மழை பெய்தது.. இன்று அனேக இடங்களில் வெயில் அடிக்கிறது.. சென்னையில்!
சென்னை: தமிழகத்தில் இன்று அனேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் நேற்று மழையில் நனைந்த சென்னையில் இன்று அனேக இடங்களில் வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில், வட கிழக்கு பருவமழை காலம் டிசம்பர் 31 ம் தேதி வரை உள்ளது. பருவ மழை தொடங்கியது முதல் சிறியதும் பெரியதுமாக மழை பெய்து வந்துள்ள போதிலு் இன்னும் திருப்திகரமான அளவில், போதிய அளவில் மழை இல்லை என்பதுதான் நிதர்சனமாக உள்ளது.

தென் மாவட்டங்களில் நிலைமை பரவாயில்லை. நன்றாக பெய்துள்ளது. ஆனால் வட மாவட்டங்கள்தான் சற்று வறண்டு போயுள்ளன. போதிய அளவில் வழக்கமான அளவில் மழை இல்லை.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கைக்கும், தமிழகத்துக்கும் இடையே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால், ஆங்காங்கே பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று அதிகாலை மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் நேரத்திலும் சற்று பலத்த மழை பெய்தது.

இந்த நிலையில் தமிழகம்-இலங்கை இடையே வங்க கடலில் நிலை கொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, இன்று தென் தமிழகத்தின் அநேக இடங்களிலும், சென்னை உள்ளிட்ட வட சென்னை மாவட்டங்களின் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், சென்னையின் பல பகுதிகளில் மோடமாக இருந்தாலும் கூட பல இடங்களில் வெயிலும் வந்து வந்து போய்க் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications