அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழை… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களாக பகலில் வெய்யிலும் இரவில் மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தை பொறுத்தமட்டில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ள வானிலை மையம், இரவு மற்றும் அதிகாலை வேளையில் அவ்வப்போது சில பகுதிகளில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக் கடலில் ஆந்திர கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications