வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி... தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்
சென்னை: வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன்காரணமாக கர்நாடகா, கேரளா மற்றும் வட மாநிலங்களில் மழை பொழிந்து வருகிறது. தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது. சென்னையில் இன்று காலையில் இதமான சூல்நிலை நிலவியது. இருந்த போதிலும் பகலில் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது:
வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.