தமிழகம் புதுவையில் 24 மணிநேரத்திற்கு கனமழை நீடிக்கும்: ரமணன்
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் இலங்கைக்கு அருகில் கடந்த வாரம் குறைந்த அழுத்த தாழ்வு நிலை உருவானதால் தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்ய தொடங்கியது. அந்த குறைந்த அழுத்த தாழ்வு நிலை கன்னியாகுமரி கடல் பகுதியில் வலுப்பெற்று குறைந்த அழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இதனால் மழையின் தன்மை பல்வேறு இடங்களில் அதிகரித்தது.
இந்தநிலையில் நேற்று காலை குறைந்த அழுத்த தாழ்வு பகுதி கரையை கடந்தது. இருந்தும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
24 மணிநேரத்திற்கு மழை
தற்போது தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் சென்னை வானிலை மைய இயக்குநர் ரமணம் தெரிவித்துள்ளார்.
வட கேரளாவில்
செய்தியாளர்களிடம் பேசிய ரமணன், காற்றாழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து அரபிக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. கற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வட கேரளா அருகே நிலைகொண்டுள்ளது. இதனால் 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாமநாதபுரத்தில் 13 செ.மீ.மழை பதிவாகியுள்ளது என்றார்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
கேரளா மற்றும் லட்சத்தீவு மீனவர்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம்
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை நீர்பிடிப்புப் பகுதியில் பெய்துவரும் தொடர்மழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 32.55 அடியாக உள்ளது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டு, வினாடிக்கு 500 கனஅடி வெளியேற்றப்படுகிறது.