தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கன மழை பெய்யுமாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பதிவாகி வருகிறது. ஓரிரு மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பதிவானது. இதற்கிடையே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த 24 மணி நேரத்தில், இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

Rain will fall in TN and puducherry

சென்னை மாநகரைப் பொறுத்தவரை, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரூரில் 60 மி.மீ, திண்டுக்கல் மாவட்டம் - நிலக்கோட்டையில் 50 மி.மீ, விருதுநகர் மாவட்டம் - சாத்தூரில் 40 மி.மீ, பெரம்பலூர் மாவட்டம்- செட்டிக்குளம், திண்டுக்கல் மாவட்டம்- கொடைக்கானல், விருதுநகர் மாவட்டம் -சிவகாசி, மதுரை மாவட்டம்- உசிலம்பட்டி ஆகிய இடங்களில் 30 மி.மீட்டர் மழை பதிவாகியது.

புதுச்சேரி, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நாளை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரியில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மாநகரைப் பொருத்தவரை, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில், நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+