சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழை
சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, வேளச்சேரி, தரமணி, கந்தன்சாவடி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை சூறைகாற்றுடன் பலத்த மழை பெய்தது.
வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழைபெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரவு திடீரென, இடி, மின்னலுடன் சிறிது நேரம் மழை பெய்தது. இதன் காரணமாக சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஒரு சில இடங்களில் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னையில் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, வடபழனி, தி.நகர், கோடம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மீனம்பாக்கம், சின்னமலை, ஆதம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழைபெய்துள்ளது. இதன் காரணமாக சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
அதேபோல் குரோம்பேட்டை, பல்லாவரம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதிகளிலும், கந்தன்சாவடி, வேளச்சேரி, தரமணி, கந்தன்சாவடி, மயிலாப்பூர் ஆகிய இடங்களிலும் மழை பெய்துள்ளது.
மேலும், பெரம்பூர், வில்லிவாக்கம், கொரட்டூர், அம்பத்தூர், முகப்பேர் ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றது.












Click it and Unblock the Notifications