நிர்மலாதேவி விவகாரம்... பீதியில் ராஜ்பவன்... ராஜினாமா கடிதத்தை வாங்கி வைத்த டெல்லி
நிர்மலாதேவி விவகாரத்தில் ராஜ்பவனில் இருந்து ராஜினாமா கடிதத்தை வாங்கி வைத்திருக்கிறதாம் டெல்லி.
Recommended Video

சென்னை: மாணவிகளுக்கு செக்ஸ் வலை வீசிய நிர்மலாதேவியின் ஆடியோ விவகாரத்தால் அதிர்ச்சியடைந்த தமிழக ராஜ்பவன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் . அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணை கமிசன் அமைத்த பிறகும் அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லையாம். கமிசனுக்கு மேலும் 2 வார கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
இந்தநிலையில், தமிழக அரசு உத்தரவிட்ட சி.பி.சி.ஐ.டி.விசாரணையில், நிர்மலாதேவி பல விசயங்களை அம்பலப்படுத்தியிருக்கிறாராம். அவருடைய ஒப்புதல் வாக்குமூலம், ஆளுநரையும், அவரது செக்ரட்டரியான கூடுதல் தலைமைச்செயலாளர் ராஜகோபாலையும் சிக்கவைப்பதாக இருக்கிறது என்கிறார்கள்.

சிபிசிஐடியின் ஏடிஜிபி அம்ரேஷ்பூஜாரியும் ராஜகோபாலும் நெருங்கிய நண்பர்கள். ஜெ. ஆட்சி காலத்தில் பூஜாரியும் ராஜகோபாலும் சசிகலாவால் பழிவாங்கப்பட்டவர்கள்.
உள்துறை செயலாளராக ராஜகோபால் இருந்தபோது, உளவுத்துறை ஐஜியாக இருந்தவர் அம்ரேஷ்பூஜாரி. தங்களை சிக்க வைக்கத்தான் நிர்மலா விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டதாக கருதியது ராஜ்பவன்.
அதனால்தான், கடுமையான நெருக்கடி கொடுத்து சிபிசிஐடி ஏடிஜிபியாக இருந்த ஜெயந்த் முரளியை மாற்றிவிட்டு அந்த இடத்தில் பூஜாரியை கொண்டு வந்தார் ராஜகோபால். அந்த வகையில், சிபிசிஐடி விசாரணை அதிகாரியிடம் நிர்மலா கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தை அம்ரேஷ்பூஜாரி மூலம் அறிந்துதான் அதிர்ச்சியடைந்துள்ளது ராஜ்பவன் என்கிறார்கள்.
சிபிசிஐடி விசாரணையில் ராஜ்பவன் தொடர்பாக பொதுவான விவகாரங்கள் எதுவும் இருக்கக்கூடாது; இருந்தால் அழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தத்தான் நேற்று முதல்வர் எடப்பாடியை ராஜ்பவனுக்கு அழைத்து ஆலோசித்துள்ளனர் பன்வாரிலாலும் ராஜகோபாலும் என்கின்றன அதிகாரிகள் தரப்பு. இந்த நிலையில், தமிழக கவர்னர் பதவியிலிருந்து விலகுவதாக ஒரு கடிதத்தை கவர்னரிடமிருந்து எழுதி வாங்கியிருக்கிறதாம் மத்திய உள்துறை அமைச்சகம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications