நிர்மலாதேவி விவகாரம்... பீதியில் ராஜ்பவன்... ராஜினாமா கடிதத்தை வாங்கி வைத்த டெல்லி
நிர்மலாதேவி விவகாரத்தில் ராஜ்பவனில் இருந்து ராஜினாமா கடிதத்தை வாங்கி வைத்திருக்கிறதாம் டெல்லி.
Recommended Video

சென்னை: மாணவிகளுக்கு செக்ஸ் வலை வீசிய நிர்மலாதேவியின் ஆடியோ விவகாரத்தால் அதிர்ச்சியடைந்த தமிழக ராஜ்பவன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் . அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணை கமிசன் அமைத்த பிறகும் அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லையாம். கமிசனுக்கு மேலும் 2 வார கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
இந்தநிலையில், தமிழக அரசு உத்தரவிட்ட சி.பி.சி.ஐ.டி.விசாரணையில், நிர்மலாதேவி பல விசயங்களை அம்பலப்படுத்தியிருக்கிறாராம். அவருடைய ஒப்புதல் வாக்குமூலம், ஆளுநரையும், அவரது செக்ரட்டரியான கூடுதல் தலைமைச்செயலாளர் ராஜகோபாலையும் சிக்கவைப்பதாக இருக்கிறது என்கிறார்கள்.

சிபிசிஐடியின் ஏடிஜிபி அம்ரேஷ்பூஜாரியும் ராஜகோபாலும் நெருங்கிய நண்பர்கள். ஜெ. ஆட்சி காலத்தில் பூஜாரியும் ராஜகோபாலும் சசிகலாவால் பழிவாங்கப்பட்டவர்கள்.
உள்துறை செயலாளராக ராஜகோபால் இருந்தபோது, உளவுத்துறை ஐஜியாக இருந்தவர் அம்ரேஷ்பூஜாரி. தங்களை சிக்க வைக்கத்தான் நிர்மலா விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டதாக கருதியது ராஜ்பவன்.
அதனால்தான், கடுமையான நெருக்கடி கொடுத்து சிபிசிஐடி ஏடிஜிபியாக இருந்த ஜெயந்த் முரளியை மாற்றிவிட்டு அந்த இடத்தில் பூஜாரியை கொண்டு வந்தார் ராஜகோபால். அந்த வகையில், சிபிசிஐடி விசாரணை அதிகாரியிடம் நிர்மலா கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தை அம்ரேஷ்பூஜாரி மூலம் அறிந்துதான் அதிர்ச்சியடைந்துள்ளது ராஜ்பவன் என்கிறார்கள்.
சிபிசிஐடி விசாரணையில் ராஜ்பவன் தொடர்பாக பொதுவான விவகாரங்கள் எதுவும் இருக்கக்கூடாது; இருந்தால் அழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தத்தான் நேற்று முதல்வர் எடப்பாடியை ராஜ்பவனுக்கு அழைத்து ஆலோசித்துள்ளனர் பன்வாரிலாலும் ராஜகோபாலும் என்கின்றன அதிகாரிகள் தரப்பு. இந்த நிலையில், தமிழக கவர்னர் பதவியிலிருந்து விலகுவதாக ஒரு கடிதத்தை கவர்னரிடமிருந்து எழுதி வாங்கியிருக்கிறதாம் மத்திய உள்துறை அமைச்சகம்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications