போன மாசம் சூப்பர் ஸ்டார் ஜூரம், இந்த மாசம் கமல் ஜூரம்! - எழுத்தாளர் ராஜேஷ்குமார்
ரஜினி, கமல் அரசியல் பரபரப்பில் மக்கள் பிரச்சினைகள் மறக்கடிக்கப்படுவதாக எழுத்தாளர் ராஜேஷ் குமார் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது முகநூல் பதிவு:
இது அரசியல் பதிவோ, தனி நபர் பற்றிய விமர்சனமோ கிடையாது. இது ஓர் ஆதங்கம். அவ்வளவே.

சென்ற மாதம் முழுவதும் சூப்பர் ஸ்டார் ஜுரம். இப்போது உலகநாயகன் ஜுரம்.
இருவரும் அரசியலுக்கு வருவார்களா மாட்டார்களா என்கிற கேள்வியில் மாட்டிக் கொண்டு தமிழக மக்கள் தங்களுடைய அத்யாவஸ்யமான குடிநீர் பிரச்சனை, ஜி.எஸ்.டி வரி ஹைட்ரோ கார்பன் அபாயம், நீட் தேர்வு, போன்றவைகளை தஙகளுடைய மூளைப் பிரதேசத்திலிருந்து அவர்களையும் அறியாமல் விரட்டியடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
அடுத்த தமிழக முதலமைச்சர் யார் என்பதை காலம் தீர்மானிக்கும்.
ஒரு டி.வி நிகழ்ச்சியில் பத்து லட்சம் வோட்டுக்கள் நாமினேஷனில் முன்னணி பெற்றுள்ள ஓவியா கூட தனியாக கட்சி ஆரம்பித்து தமிழக முதலமைச்சராகி 2021 ல் ஆகஸ்ட் 15 ல் கோட்டையில் கொடி ஏற்றலாம். யார் கண்டது?












Click it and Unblock the Notifications