காலையிலேயே வாக்கைப் பதிவு செய்தார் ரஜினிகாந்த்!
சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் தனது வாக்கை காலையிலேயே பதிவு செய்துவிட்டார் ரஜினிகாந்த்.
நடிகர் சங்கத் தேர்தல் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட் எப்பாஸ் பள்ளியில் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.
காலையிலேயே ஆர்வத்துடன் நடிகர் சங்க உறுப்பினர்கள் வாக்களிக்கத் தொடங்கினர்.
நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரின் மனைவி ராதிகா, பொதுச் செயலாளர் ராதாரவி, விஷால் அணியில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் பொன் வண்ணன் ஆகியோர் காலையிலேயே வாக்களித்துவிட்டனர்.
தேர்தல் நடப்பதைக் கண்காணித்தபடி இரு அணியினரும் பள்ளி வளாகத்துக்குள் நிற்கின்றனர்.
இந்த நிலையில் காலை 8 மணிக்கே வாக்களிக்க வந்துவிட்டார். தனது வாக்கைப் பதிவு செய்த பின், தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கு சில வேண்டுகோள்களை முன்வைத்தார்.
யார் வென்றாலும் தோற்றாலும் நடிகர் சங்கத்தில் ஒற்றுமை அவசியம் என்றார் அவர்.