For Daily Alerts
Just In
ரஜினி, கமல் உட்பட புதிதாக கட்சி துவங்கும் யாராலும் ஆட்சியை பிடிக்க முடியாது: திருநாவுக்கரசர்
ரஜினி, கமல் என யார் புதிதாக கட்சி துவங்கினாலும் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
புதிதாக கட்சி துவங்கும் யாரும் ஆட்சியை புடிக்க முடியாது
வேதாரண்யம் : ரஜினி, கமல் என அரசியலுக்கு யார் புதிதாக வந்து கட்சி துவங்கினாலும் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் புதிது புதிதாக அரசியல் கட்சிகள் துவங்கப்பட்டு வருகிறது.
ஆனால், ரஜினி, கமல் என யார் அரசியலுக்கு வந்து புதிதாக கட்சி துவங்கினாலும் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை. தமிழக மக்கள் அவர்களுக்கு ஆதரவு அளிக்கமாட்டார்கள்.
தமிழகத்தில் அதிமுக, திமுக வலிமையாக இருப்பதற்கு அக்கட்சிகளின் கட்டமைப்புகளே காரணம். அது பல ஆண்டுகால உழைப்பில் உருவானது என்று தெரிவித்துள்ளார்
Comments
dmk admk rajini kamal congress thirunavukkarasar திமுக அதிமுக ரஜினி கமல் காங்கிரஸ் கட்சி ஆட்சி திருநாவுக்கரசர்
English summary
Rajini Kamal wont able to Succeed in TN says Thirunavukkarasar. Tamilnadu Congress Committee leader Thirunavukkarasar says that, DMK and ADMK strong enough because of their Infrastructure.
Story first published: Wednesday, June 13, 2018, 11:10 [IST]