For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'யாருக்கும் அஞ்சாதவர்'... சோ உடலுக்கு ரஜினி கண்ணீர் அஞ்சலி

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த அரசியல் விமர்சகர், மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமியின் உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார் நடிகர் ரஜினிகாந்த்.

பன்முகம் கொண்ட ஆளுமையான சோ ராமசாமி இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். அவரது உடலுக்கு திரைப் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Rajini pays last respect to Cho

சோவின் நெருங்கிய நண்பரான நடிகர் ரஜினிகாந்த் இன்று அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியளர்களிடம் கூறுகையில், "சோ மிகச் சிறந்த பத்திரிகையாளர். பத்திரிகையாளர்களில் ஒரு ஜாம்பவான்.

சோ எனது மிகச் சிறந்த நண்பர்.. தனது கருத்துகளைச் சொல்வதில் யாருக்கும் அஞ்சாதவர். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். சோவின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்," என்றார்.

English summary
Actor Rajinikanth conveyed his condolences to the demise of his close friend Cho S Ramaswamy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X