நல்ல நண்பரை இழந்து விட்டேன்... ஸ்ரீதேவி மறைவுக்கு ரஜினி இரங்கல் #Sridevi
நல்ல நண்பரை இழந்துவிட்டேன் என்று ஸ்ரீதேவியின் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துவிட்டார்.
சென்னை: ஸ்ரீதேவியின் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் நல்ல நண்பரை இழந்துவிட்டேன் என்று தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
துபாயில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஸ்ரீதேவி. அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அப்போதே அவரது உயிர் பிரிந்தது.
அவரது மறைவால் தமிழ் மற்றும் இந்தி திரையுலகினர் அதிர்ச்சிய அடைந்துள்ளனர். இதுகுறித்து ரஜினி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ஸ்ரீதேவி இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். நல்ல நண்பரை இழந்துவிட்டேன். சிறந்த நடிகையை திரையுலகம் இழந்துவிட்டது.
I’m shocked and very disturbed. I’ve lost a dear friend and the industry has lost a true legend. My heart goes out to her family and friends. I feel the pain with them #RIPSridev ... you will be missed.
— Rajinikanth (@superstarrajini) February 25, 2018
அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என்று ரஜினி தெரிவித்துள்ளார்.